Monday, February 28, 2011

செல்வா கதைகள்

முன்குறிப்பு : அனைவருக்கும் ஒரு நற்செய்தி.  இனிமேல் நீங்க திங்கள் கிழமையை நினைத்து பயப்பட வேண்டாம். கோமாளி ப்ளாக்ல செல்வா கதைகள் கூடிய விரைவில் நிறுத்தப்படும்.

                                      செல்வாவும் பாட்டுப்போட்டியும் 

ஒரு முறை செல்வா ஒரு தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்ட பாட்டுப் போட்டிக்குச் சென்றிருந்தார். அங்கே ஒவ்வொருவராக மேடைக்குச் சென்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். நடுவர்களும் அவர்களின் நிறைகுறைகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தனர்.

அடுத்து செல்வாவின் முறை. செல்வாவும் தைரியமாக மேடையில் ஏறிப் பாடத்துவங்கினார். செல்வா பாட்டை முடிப்பதற்குள் நடுவர்களில் ஒருவர் போதும் நிறுத்துங்க என்று கூச்சலிட்டார். மேலும் " என்ன பண்ணுறீங்க ? " என்றார் கோபமாக.

" பாட்டுத்தான் பாடுறேங்க ?! "

" இதுக்குப் பேரு பாட்டா ? ஸ்ருதி , டெம்ப்போ , பிட்ச் எதுவுமே வரல , எதுக்கு நீங்க எல்லாம் பாடனும்னு விரும்புறீங்க ? " என்றார்.

" சாரி மேடம் , பிரிப்பர் பண்ணாம வந்திட்டேன் , ஒரு மணிநேரம் கழிச்சு பாடலாமா. ? " என்றார்.

நடுவர்களும் ஒப்புக்கொள்ள செல்வா மேடையிலிருந்து கிளம்பினார்.

சரியாக ஒரு மணிநேரத்திற்குப் பிறகு செல்வா மேடைக்கு வந்தார். கூடவே ஒரு பெண்ணும் வந்தார். 

செல்வாவைப் பார்த்த நடுவர் , " இது ஒருத்தர் மட்டுமே பாடுற போட்டி , எதுக்கு ரண்டு பேரு வந்திருக்கீங்க ? "

" மேடம் இவுங்க பேரு ஸ்ருதி , நீங்க தானே கொஞ்ச நேரம் முன்னாடி ஸ்ருதி வரலைன்னு சொன்னீங்க., அதான் கூட்டிட்டு வந்தேன். "

நடுவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு செல்வாவை கோபத்துடன் பார்த்தனர்.

அவர்களின் கோபத்தைப் புரிந்து கொண்ட செல்வா " டெம்போ வரலைன்னு கோபப்படுறாங்க போல " என்று தனக்குள்ள பேசிக்கொண்டு , " மேடம் , டெம்போ வெளிய நிக்குது., அப்புறம் பிட்ச் கேட்டீங்க , நேரு ஸ்டேடியம கேட்டிருக்கேன், நல்ல வேலைக்கு முடிஞ்சதும் சைக்கிள்ள கட்டியாவது இழுத்துட்டு வந்திடுவேன் " என்றார் பெருமை பொங்க.

இதைப் பார்த்த நடுவர்களில் ஒருவர் " இனிமேல் சத்தியமா எந்த போட்டிக்கும் நடுவரா போகவே மாட்டேன் " என்று சத்தியம் செய்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

செல்வாவிற்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தபோதிலும் மனதிற்குள் நினைத்துகொண்டார் தன்னைத் தேர்வு செய்யும் அளவிற்கு அவருக்கு திறமை பத்தாது போலும் என்று! ஆனால் அவரைப் பாடுவதற்கு அந்தத் தொலைக்காட்சி நிலையம் இன்றுவரை அனுமதிக்கவில்லை என்பது சற்றே வேதனையான செய்தி!!


                                               OMR தாள் 


செல்வா பள்ளியில் படித்துகொண்டிருந்த போது அவரது தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆனால் செல்வா எந்தப் பரீட்சைக்கும் பயந்தவரல்ல என்பது அவரது அறிவுத்திறமையால் நாம் அறிந்ததே!

இன்னும் சொல்லப் போனால் செல்வா எந்தப் பரீட்சை எழுதப் போகிறார் என்றே அவருக்குத் தெரியாது. சில மாணவர்கள் அப்படி இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்குக் கேள்வித்தாளை வாங்கினால் அது என்ன பாடம் என்பது தெரிந்துவிடும்.

ஆனால் செல்வாவோ கேள்வித்தாளை வாங்கினாலும் அவர் என்ன பரீட்சை எழுதிகிறார் என்பது அவருக்கோ அல்லது அவரது விடைத்தாளைத் திருத்தும் ஆசிரியருக்கோ ஏன் அந்தக் கடவுளுக்கோ கூடத் தெரியாது. ஆனால் கூடுதல் விடைத்தாள்கள் வாங்குவதில் செல்வாவை இதுவரை யாரும் மிஞ்சியதில்லை. ஒவ்வொரு பரீட்சைக்கும் குறைந்தது 30 கூடுதல் விடைத்தாள்கள் வாங்குவார்.

அதுமட்டும் அல்ல. ஒரு சமயம் அவர் எட்டாம் வகுப்புப் படித்துகொண்டிருந்தார். ஆனால் அவர் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களுடன் சேர்ந்து ஒன்பதாம் வகுப்புத் தேர்வு எழுதினார் என்பதே அவரது அறிவுத்திறமையை நமக்கு உணர்த்தும்.

இப்படி இருந்த செல்வாவிடம் ஒருநாள் OMR (Optical Mark Reader) தாள் ஒன்றினைக் கொடுத்து தேர்வு ஒன்று வைக்கப்பட்டது. இதில் கொள்குறி வகையிலான கேள்விகளே இருக்கும் என்பது நீங்கள் அறிந்ததே.

அந்தத் தேர்வு தொடங்கிய சில நிமிடங்களில் செல்வா கூடுதல் விடைத்தாள் கேட்டார்.

இதைப் பார்த்த ஆசிரியர் " OMR சீட் எக்ஸாம்ல எதுக்கு உனக்கு அடிசனல் சீட் ? "

" சார் , அதனால ஒன்னும் பிரச்சினை இல்லை , நான் எழுதிடுவேன் , நீங்க அடிசனல் குடுங்க " என்றார்.

" என்னையப் பார்த்தா உனக்கு நக்கலாத் தெரியுதா ? ஒழுங்கா உட்கார். " என்று எரிச்சல் பட்ட ஆசிரியரைப் பார்த்த செல்வா சற்றே அச்சத்துடன் சோகமாக அமர்ந்தார்.

நீதி : மேற்கண்ட கதைகளால் செல்வா போன்ற அறிவாளிகள் தங்களது அறிவுத்திறமையை வெளிப்படுத்த முடியாமல் போகிறது என்பது நமக்குத் தெளிவாக விளங்குகிறது.. நிச்சயம் உலகம் மாற வேண்டும்!!

பின்குறிப்பு : முன்குறிப்பால் மகிழ்ச்சி அடைந்தோருக்கு ஒரு சோகமான செய்தி. செல்வா கதைகளுக்கு என்று தனி வலைப்பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதும் அதன் முகவரி http://www.selvakathaikal.blogspot.com/ இது எனபதையும் தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன்.

Friday, February 25, 2011

SIM ன் தமிழ்ச் சொல்

கொஞ்ச நாள் முன்னாடி எங்கயோ இரண்டுபேர் SIM க்கு தமிழ்ல என்ன பேரு அப்படின்னு பேசிக்கிட்டிருந்தாங்க. அப்புறம் நேத்திக்கு எதேச்சையா ட்விட்டர்லையும் இது பத்தி பேசிக்கிட்டிருந்ததப் பார்த்தேன்.

எனக்கும் ரொம்ப நாளாவே இதுமேல கொஞ்சம் குழப்பம்தான். இதுக்கு உண்மைலேயே தமிழ்ல இன்னும் பேர் வைக்கலியா இல்ல எனக்குத் தெரியலையா ?

*.SIM : Subscriber Identification Module.

*.CDMA - Code Division Multiple Access.

*.GSM - Global System for Mobile Communications

நான் பெரிசா இழுக்க விரும்பல. இங்க நிறைய தமிழ் ஆர்வலர்களும் அறிஞர்களும் இருக்காங்க. அதனால இதுவரைக்கும் SIM க்கு பேர் வைக்கப்பட்டிருந்தால் அது என்ன அப்படின்னு சொல்லுங்க , அப்படி இன்னும் வைக்கப்படலை அப்படின்னா இந்தப் பதிவுல விவாதம் பண்ணி ஒரு பேர் வைங்க.

நான் ஏன் சொல்லுறேன்னா இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அதுக்குப் பேர் இல்லைனு சொல்லிட்டு இருக்குறது , நாமளா சிந்திச்சு ஒரு பேர் வைப்போமே. என்னடா கோமாளி கூப்பிட்டு நாம வரதா அப்படின்னு யாரும் நினைக்காதீங்க . தயவுசெஞ்சு ஒரு பேர் வைங்க!

இதப் படிக்கிறவங்க எல்லோரும் நீங்க SIM க்கு என்ன பேர் வைக்கலாம்னு நினைக்கிறீங்க அப்படிங்கிறத பின்னூட்டத்துல சொல்லுங்க.


Monday, February 21, 2011

செல்வா கதைகள்

முன்குறிப்பு : முன்குறிப்பு வெள்ளைக் கலர்ல இருக்கு பாருங்க! 

                         செல்வாவும் தேங்காயின் வாழ்நாளும் 

ஒரு முறை செல்வாவும் அவரது சகோதரரும் அவர்களது தோட்டத்தில் உலாவிக்கொண்டிருன்தனர்.

அப்பொழுது ஒரு தென்னை மரம் பாளை(பூ) விட்டிருந்தது. இதைப் பார்த்த அவரது சகோதரர் இது காயா மாறி பறிக்கிற அளவு வரதுக்கு  இன்னும் ஒரு வருசம் ஆகும் என்றார்.

இதைகேட்ட செல்வா அவ்ளோ நாள் எல்லாம் ஆகாது , ஒரு ஆறு மாசத்துல முத்திடும் என்றார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் இருவரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

அதன்படி அந்தக் குலையை அடையாளமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதனை ஒரு வருடம் கண்காணிக்க வேண்டும் என்றும் , தினமும் ஒருவர் மாற்றி ஒருவர் வந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

ஒப்பந்தம் செய்து அடுத்த நாள் அவரது சகோதரர் வந்து பார்த்துச்  சென்றுவிட்டார். அடுத்த நாள் செல்வாவின் முறை. அதற்கு அடுத்த நாள் சென்ற அவரது சகோதரர் அந்தக் குலை காணாமல் போனதால் சற்றே அதிர்ச்சியுற்றார்.

செல்வாவிடம் விசாரித்த போது தினமும் தோட்டம் சென்று வருவது சிரமமாக உள்ளது , அதனால் அந்தக் குலையை வெட்டி எடுத்து வந்து வீட்டில் வைத்திருப்பதாகவும் இனிமேல் தோட்டம் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே பார்த்துக்கொள்ளலாம் என்றும் கூறினார்.

இதைக்கேட்ட அவரது சகோதரர் " லூசா நீ ? இனிமேல் அது எப்படி வளரும் ?" என்றார் கோபமாக.

" தேங்காய் கூடத்தான் நாம வீட்டுல வச்சிருக்கோம் , அது கொஞ்ச நாளுக்கு அப்புறம் கொண்டுபோய் மண்ணுல போட்டாலும் வருதில்ல , அதுமாதிரி வளராதா ? " என்றார் அப்பாவியாக.



                       செல்வாவும் கைத்தொழிலும் 

செல்வா தனது படிப்பினை முடித்துவிட்டு வேலை தேடலாம் என்று முயற்சித்துக்  கொண்டிருந்தார். 

ஒரு நாள் அவரது மாமா செல்வாவின் வீட்டிற்கு வந்தார். செல்வாவிடம் என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்றார். அதற்கு செல்வா வேலை தேடிக்கொண்டிருப்பத்தாகக் கூறினார். இதைக்கேட்ட அவரது மாமா வேலை கிடைக்கும் வரையில் கையில் இருப்பதைக் கொண்டு சுயதொழில் ஒன்று செய்  என்று அறிவுரை கூறிச்சென்றார்.  

சிறிது நாட்களுக்குப் பிறகு செல்வா அவரது மாமாவைச் சந்திக்கச் சென்றார். மாமாவிடம் தான் புதிதாக தொழில் தொடங்கியிருப்பதாகவும் அதற்கு அவர் வாழ்த்தி முதலில் துவங்கி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பின்னர் இருவரும் செல்வா தொழில் துவங்கியுள்ளதாகக் கூறிய கடைக்குச் சென்றனர். அங்கே முன்னால் ஒரு பெரிய போர்டில் " உங்கள் பல் சிறந்த முறையில் சுத்தம் செய்து தரப்படும் , சொத்தைப் பல்லா , இல்லை பீடிக்கறை உள்ள பல்லா? கவலை வேண்டாம். எங்களிடம் கழட்டிக் கொடுங்கள். விரைவில் சுத்தம் செய்து தருகிறோம்! என்ற அறிவிப்பு இருந்தது.

இதைப் பார்த்த அவரது மாமா சற்றே வித்தியாசமாக " இது என்ன ? எனக்கு ஒண்ணும் புரியலை " என்றார் .

" மாமா நீங்கதானே அன்னிக்கு கைல இருக்குறத வச்சு ஒரு தொழில் தொடங்கு அப்படின்னு சொன்னீங்க ,அதான் இந்த மாதிரி தொழில் தொங்கினேன் " என்றார் .

இதைக்கேட்ட அவரது மாமா " நான் சொன்னதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?! " என்றார்.

" நீங்க அன்னிக்கு சொல்லும்போது நான் பல்லு விளக்கிட்டு இருந்தேன் , அப்போ என் கைல TOOTHBRUSH இருந்துச்சு , நீங்க கைல இருக்குறத வச்சு தொழில் தொடங்க சொன்னீங்க. அப்படின்னா அத வச்சு இந்தத் தொழில்தானே பண்ண முடியும் , அதனால உங்க பல்ல கழட்டிக்குடுங்க , முதல் போனி உங்ககைல இல்ல இல்ல உங்க வாய்ல இருந்துதான்!! "

" கைல இருக்குறத வச்சு பண்ணு அப்படின்னா ? ( எதையோ சொல்ல வந்தவர் ) வேண்டாம் சாமி , நான் ஒண்ணும் சொல்லல , ஆள விடு " என்று புலம்பியவாறே சென்றுவிட்டார்.

செல்வாவிற்கு பெரும் குழப்பம் , அவர் சொன்னதைத் தானே செய்தோம் ஏன் திட்டுகிறார் என்று புரியாமல் விழித்துக்கொண்டிருந்தார். பாவம் அறிவாளிகளை உலகம் ஒருபோதும் முதல் முயற்சியில் ஏற்றுக்கொள்வதே இல்லை.

நீதி : நீதி வெள்ளைக் கலர்ல இருக்கு பாருங்க 

பின்குறிப்பு : என்னடா நாம வெட்டியா கிரிக்கெட் மட்டுமே பார்த்துட்டு இருக்கோமே , இதனால உருப்படியா ஒன்னும் இல்லையே அப்படின்னு பீல் பண்ணாதீங்க ,  உலகக்கோப்பை சவால் பரிசுப்போட்டி எங்க தலைவர் கோகுலத்தில் சூரியன் ல நடக்குது .நீங்களும் கலந்துட்டு பரிசினை வெல்லுங்கள்.

Friday, February 18, 2011

தமிழ் இனி மெல்லச்சாகுமோ ?


அம்மா என்று அழைக்கத் தொடங்கியவனை 
MUMMY என்று திருத்தம் செய்தபோது இருந்த மகிழ்ச்சி ;

" உயிரெழுத்துனா என்னமா ? " என்றவனிடம் 
" ENGLISH ல VOWELS இருக்குல்லப்பா அது மாதிரி 
உயிரெழுத்துனா தமிழ் VOWELS " என்றபோதிருந்த பெருமை ;

அடுத்த வீட்டுப் பையன் " அம்மா இங்கே வாவா ,
ஆசை முத்தம் தா தா " என்றும் பாடும் பொழுது ,
தன்வீட்டுப் பையன் " RAIN RAIN GO AWAY " என்றுபாடிய 
போது வந்த சந்தோசம் ;

எதற்கேனும் எப்பொழுதேனும் மேற்கோள் காட்ட 
WORDSWORTH யும் SHAKESPHERE யும் 
சொல்லும்போது கிடைக்கும் பேரானந்தம் ;

மம்மி என் பேருக்கு டமில்ல TWO சுழி நா வருமா ?
இல்ல THREE சுழி நா வருமா ? என்று கேட்கும் 
மகனைப் பார்க்கும்போது வரும் புன்சிரிப்பு ;

பையன் என்ன டிவி பாக்குறான் என்று  
வேறு கேள்வி இல்லாமல் எதேட்சயாகக் கேட்போரிடம் 
" HE LIKES ONLY ENGLISH CHANNELS & HOLLYWOOD MOVIES " 
என்று பதில் சொல்லும்போது உள்ள பெருமிதம் ;

இதுவரை ஆங்கில மோகத்தில் மகிழ்ச்சியுற்ற மனம் 
ஏனோ விரும்புகிறது தமிழ்க் கலாச்சாரத்தை 
நீங்கள் முதியோர் இல்லம் சென்றுவிடுங்கள் என்னும் மகனைப் பார்க்கும்பொழுது!!!

HOW ARE YOU என்ற பதத்தினை ஹவ் ஆர் யூ என்று எழுதி 
மனப்பாடம் செய்த காலம் போய் இப்பொழுது எப்படி இருக்க
என்னும் பதத்தினை EPPADI IRUKKA என்று எழுதி மனப்பாடம் 
செய்யும் காலத்திற்கு முன்னேறிக்கொண்டிருக்கிறோம்!!
தமிழ் இனி மெல்லச்சாகுமோ ? 

பின்குறிப்பு : இங்கிலீஸ் படிக்கவே வேண்டாம்னு சொல்ல வரலைங்க , கண்டிப்பா அது படிச்சே ஆக வேண்டிய ஒண்ணு . ஆனா அத பயன்படுத்த வேண்டிய இடத்துல மட்டும் பயன்படுத்தினா நல்லதுன்னு நினைக்கிறேன்!!




Wednesday, February 16, 2011

பதிவர்களும் SAME TO YOU வும்

முன்குறிப்பு : முதல்ல இந்தப் பதிவு பின்னாடி வர்ற அந்தப் பத்துப் பதிவர்களுக்குத்தான். அது என்ன மேட்டர் அப்படின்னா நீங்களே பாருங்க , நேத்திக்கு சில பதிவர்களோட பதிவுல SAME TO YOU அப்படின்னு சம்பந்தமே இல்லாத கமெண்ட் போட்டேன். அதுக்கு அவுங்களோட பதில்களை பார்க்கலாம்.

1 .முதல்ல நம்ம SPEED MASTER ப்ளாக்ல இந்தப் பதிவுல நான் போட்ட கமெண்ட்க்கு அவரோட பதில் கீழ இருக்கு. இந்தப் பதிவுல வோடபோன் விளம்பரத்துல வர்ற நாயோட படம் போட்டு செம காமெடி பண்ணிருந்தார்.




Blogger Speed Master said...





//


கோமாளி செல்வா said...
SAME TO YOU

இது எதுக்கு??

**********************************************************************************************

2.அடுத்து வேடந்தாங்கல் ப்ளாக்ல இந்தப் பதிவுல போட்ட கமெண்ட். அதுக்கு அவரோட பதில் கீழ. இந்தப் பதிவுல பணம் என்ன மரத்துலயா காய்க்குது அப்படின்னு தோட்டக்கலை பத்தி ரொம்ப அருமையா சொல்லிருந்தார். ஒரு நல்லா பதிவுல இப்படி விளையாடனுமா அப்படின்னு தோனுச்சு , இருந்தாலும் ஒண்ணும் நினைச்சிக்க மாட்டார் அப்படின்னு அந்த கமெண்ட் போட்டேன்.

sakthistudycentre-கருன் சொன்னது…




கோமாளி செல்வா சொன்னது…

SAME TO YOU
//புரியல தலைவா?


**********************************************************************************************

3. அடுத்து ஆகாயமனிதனோட இந்தப் பதிவுல.. இந்தப் பதிவுல மூணு போட்டோ போட்டு கமெண்ட் போட்டிருந்தாரு. செம நக்கல் கமெண்ட்ஸ்.






ஆகாயமனிதன்.. said...




athey thaan ungalukku...same to u...selva !

**********************************************************************************************

4. அடுத்து கவிதை வீதி சௌந்தர் அவர்களின் இந்தப் பதிவுல.. அதுல துன்பம் இல்லாத வாழ்கை நல்லா இருக்காது அப்படின்னு சொல்லிருந்தார்.. ஒரு அழகான கவிதை. நேரம் இருந்த படிச்சு பாருங்க. எனக்கு பிடிச்சிருந்தது..  சௌந்தர் அண்ணன் SAME TO YOU அப்படிங்கிற கம்மேன்ட்க்கு நிறைய ரிப்ளை பண்ணிருந்தாரு.





////கோமாளி செல்வா said... [Reply to comment]

SAME TO YOU
///////
எனக்கு ஒன்னும் புரியல..
அதைப்பத்தில ஒரு கூட்டம் போட்டு ஒரு தீர்மானம் தீட்டி அடுத்த கட்ட நடவடிக்கையை பின்னர் தெரிவிக்கிறோம்..

இல்லை எனறால் உங்களுக்கும் அதே பதில்தான்

SAME TO YOU

**********************************************************************************************

5. அடுத்து நாஞ்சில் மனோ அண்ணா ப்ளோக்ல இந்தப் பதிவுல. இது ஒரு நல்லா நகைச்சுவைப் பதிவு. அவர் காலைல இருந்து பண்ணின லொள்ளு எல்லாத்தையும் எழுதிருப்பார். செம நக்கலா இருக்கும். அதுவும் இல்லாம இந்தப் போஸ்ட் படிச்சுட்டு அதோட கமெண்ட்ஸ் படிச்சு பாருங்க. கண்டிப்பா வயிறு வலிக்க சிரிப்பீங்க.



MANO நாஞ்சில் மனோ said...




//கோமாளி செல்வா said...
SAME TO YOU///


எலேய் மக்கா அப்போ நீயும் இன்னைக்கு இதே மாதிரிதான் காமெடி பீசானியா...ஹா

**********************************************************************************************

6. அடுத்து ஜெய்சங்கர் அண்ணனோட இந்தப் பதிவுல. அது பழைய போஸ்ட்.. இருந்தாலும் சும்மா போய் போட்டுட்டு வரலாம் அப்படின்னு போய் போட்டுட்டு வந்தேன். என்ன ரிப்ளை பன்னிருக்காருனு பாருங்க.




Blogger jaisankar jaganathan said...





@செல்வா


நன்றி

**********************************************************************************************

7. அடுத்து தமிழ்மணி அண்ணனோட விதைகள் அப்படிங்கிற ப்ளோக்ல இந்தப் பதிவுல. இதுல அண்ணன் ஜீவிதம் அப்படின்னு ரொம்ப அழக கவிதை எழுதிருந்தாரு. எங்க ஊருகாரர் வேற. ஹி ஹி.



கோமாளி செல்வா said...




SAME TO YOU
தமிழ்மணி said...




நன்றி செல்வா

**********************************************************************************************

8. அடுத்து பன்னிகுட்டி ராமசாமி அண்ணனோட இந்தப் பதிவுல. அவரோட காதலர்தின சிறப்பு ஒளிபரப்பு. ஹி ஹி 


Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...


SAME TO YOU//////

என்னது சேம் டு யூவா? நான் என்ன ஹேப்பி நியூ இயரா சொல்லிக்கிட்டு இருக்கேன் படுவா, அதுவும் பதிவு போட்டு ரெண்டு நாளாச்சு, எப்போ வந்து சொல்லுது பாரு? என்ன யாருக்காவது ஏதாவது சிகுனல் பாஸ் பண்றியா? பிச்சிபுடுவேன் பிச்சி.....!
**********************************************************************************************

9. அடுத்து நம்ம எஸ்.கே அண்ணனோட எதுவும் நடக்கலாம் ப்ளாக்ல இந்தப் பதிவுல.. இந்தப் பதிவு ஒரு தொடர்கதை.செம திரில்லர் கதையும் கூட. 


எஸ்.கே said...

//கோமாளி செல்வா said...




SAME TO YOU//

என்னது சேம் டூ யூவா? எதுக்கு உங்களை யாராவது லூசுன்னு சொன்னாங்களா? என்னையும் கோத்து விடுறீங்களோ?


**********************************************************************************************

10. அடுத்து நம்ம சுற்றுலாவிரும்பி அருண் ப்ளோக்ல இந்தப் பதிவுல.. இது ஒரு செம லவ் ஸ்டோரி. படிச்சா உங்களுக்கும் லவ் பண்ண தோணும்.



Blogger Arun Prasath said...

 வாங்க செல்வா சார் என்ன நடக்குது




**********************************************************************************************


நீதி : இப்படிஎல்லாமா புதிய முயற்சி பண்ணுறாங்க ?

பின்குறிப்பு : இதுல மேல இருக்குற பதிவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துகொள்கிறேன்.அப்புறம் எஸ்.கே , பன்னிகுட்டிரம்சாமி, அருண் இவுங்க மூணுபேருக்கும் நன்றி செல்லாது. ஹி ஹி. இவுங்களுக்கு எதுக்கு நன்றி சொல்லிட்டு.. இது புதிய முயற்சிக்காக ரொம்ப கஷ்டப்பட்டு எழுதின பதிவு , அதனால யாரும் பீல் பண்ணாதீங்க. விளையாட்டா மட்டும் எடுத்துக்கோங்க.

Monday, February 14, 2011

செல்வா கதைகள்

முன்குறிப்பு : சிலருக்கு என்றே சில கிழமைகள் படைக்கப்பட்டிருக்கும். அதுபோலவே செல்வா கதைகளுக்காகப் படைக்கப்பட்டதே திங்கள் கிழமை!

                          லேண்ட்மார்க்கும் செல்வாவும்

  ஒரு முறை செல்வா அவரது நண்பரைக் காண நண்பரின் ஊருக்குச் சென்றிருந்தார். அப்பொழுது செல்வாவிற்கு நண்பரின் வீடு தெரியாது என்பதால் செல்வாவை பேருந்து நிலையத்திற்கு வந்தவுடன் அழைக்குமாறு கூறியிருந்தார். செல்வாவும் நண்பர் கூறியது  போல பேருந்து நிலையத்தில் இறங்கியதும் அவருக்கு அழைத்தார்.

செல்வா : நான் பஸ் ஸ்டாண்ட் வந்திட்டேன்

நண்பர் : அங்கேயே இரு , வந்திடறேன் . நீ  எந்த இடத்துல நிக்கிறனு சரியா சொல்லு.?

செல்வா : அதான் பஸ் ஸ்டாண்ட்ல..

நண்பர் : அது தெரியுது , பஸ் ஸ்டாண்ட்ல எங்கனு சொல்லு , எதாச்சும் லேண்ட்மார்க் சொல்லு.

செல்வா : இரு கேட்டு சொல்லுறேன் ., அருகில் இருந்தவரிடம் இங்க லேண்ட்மார்க் விக்கும்களா ?

அவர் : லேண்ட்மார்க் எல்லாம் விக்காது ,  தொண்டைலதான் விக்கும்!!
( அவரும் செல்வா போன்ற அறிவாளி போலும் )

செல்வா : இங்க விக்காதுன்னு சொல்லுராங்கடா..!!

நண்பர் : உஸ் , லேண்ட்மார்க் அப்படின்னு பக்கத்துல இருக்குற பெரிய கட்டிடமோ , இல்ல எதாச்சும் அடையாளம் சொல்லு.. அது எங்கயும் விக்க மாட்டாங்க!!

செல்வா : இங்க ஒரு பெரிய கட்டிடம் இருக்கு , அதுல கூட பஸ் எல்லாம் வந்து நிக்குது.

நண்பர் : பஸ் ஸ்டாண்ட்னா பஸ் வந்து நிக்கத்தான் செய்யும். வேற எதாச்சும் சொல்லித்தொலை , உசுர வாங்காத.!

செல்வா : இங்க BSNL BROADBAND @ 225 PM அப்படின்னு எழுதிருக்கு.!

நண்பர் : அது நிறைய இடத்துல இருக்கும் , வேற எதாச்சும் சொல்லு.

செல்வா : இங்க ஒரு நோட்டீஸ் ஒட்டிருக்காங்க , NO SALES , NO RISK , NO MARKETING @ 15000 PM அப்படின்னு இருக்கு. இது போதுமா ?

நண்பர் : நீ ஒண்ணுமே சொல்ல வேண்டாம் , நான் உன்னப் பார்த்திட்டேன்.

செல்வா : சரி வா.அருகில் வந்த நண்பரிடம் நான் எப்படி கரட்டா லேண்ட்மார்க் சொன்னேன் பார்த்தியா ?

நண்பர் : நீ சொன்ன லேண்ட்மார்க வச்சு நாலு நாள் ஆனாலும் கண்டு பிடிக்க முடியாது . அங்க ஒருத்தர் அழுதுட்டே போனாரு , என்னனு கேட்டதுக்கு லேண்ட்மார்க் எங்க விக்கும் அப்படின்னு ஒருத்தன் என்னைய கேட்டு கேட்டு தொந்தரவு செஞ்சான் அவன் தொந்தரவு தாங்காம தான் இங்க வந்தேன் அப்படின்னு சொன்னார். அதான் உன்ன கண்டுபிடிச்சேன்.

செல்வா : சரி நீ சொல்லு லேண்ட்மார்க் எங்க இருக்கு ?

நண்பர் : இனிமேல் உன் வாயத்தொறந்து எதாச்சும் கேட்டா கண்டிப்பா எனக்கு நான் அப்படியே போய்டுவேன்..!!!

                                                     செல்வாவும் வரட்டீயும் 


   ஒரு முறை செல்வாவும் அவரது நண்பர் ஒருவரும் பேக்கரி ஒன்றிக்கு டீ சாப்பிடலாம் என்று சென்றனர். அப்பொழுது செல்வா நண்பரிடம் " நீங்க டீ குடிப்பீங்கதானே , எனக்கு பால் " என்றார்.

நண்பர் : எனக்கு வரட்டீ ..

செல்வா : அது இங்க கிடைக்குமா ?

நண்பர் : எல்லா டீ கடைலயும் கிடைக்கும்..

செல்வா : ஆனா அது எப்படி தயாரிப்பாங்க..?

நண்பர் : எப்பவும் போலதான் ..

செல்வா : ஆனா குடிக்கும்போது பேட் ஸ்மெல் வராதா ?

நண்பர் : டீ மனம் தானே வரும், பேட் ஸ்மெல் எதுக்கு வருது ?

செல்வா : டீ மனம் தான். ஆனா வரட்டி ( கவனிக்க செல்வா வரட்டீ என்ற சொல்லை வரட்டி என்று புரிந்துகொண்டுள்ளார் ) எப்படி மனம் அடிக்கும் ?

நண்பர் : நீ சொல்லுறது எனக்குப் புரியலை.

செல்வா : வரட்டி அப்படின்னா சாணி எடுத்து செவுத்துல ரவுண்டா அடிச்சு வச்சிருப்பாங்களே அதுதானே , படத்துல பார்த்திருக்கேன்..

நண்பர் : அது வரட்டி , இது வரட்டீ!! ஏன்டா இப்படி உயிரை வாங்குற ? உன்கூட டீ குடிக்க வந்தது தப்பா ? இனிமேல் எப்பவாச்சும் என்ன டீ குடிக்க கூப்பிட்டுறாத ? என்று புலம்பியவாறே அவர் செல்வாவை முறைத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டார்.

நீதி : அம்மா என் கால் சைக்கிள்ள மேல இருந்து கீழ வரை ஏன் எட்ட மாட்டேங்குது ? மரத்துல தொங்குற மாங்காய் என்ன ஏன் கிண்டல் பண்ணுது ? எனக்கு வயசு தான் ஆகுது , நான் எப்ப உயரமாவேன் ?

பின்குறிப்பு : செல்வா கதைகள் வருவதால் திங்கள் கிழமை என்பது கொண்டாடப் படவேண்டிய ஒன்று.!

Friday, February 11, 2011

70 ஆம் வயதில் நான்.!

முன்குறிப்பு : நான் என்னோட 70 வயசுல இருந்து ஒரு பதிவு எழுதினா எப்படி இருக்கும் அப்படின்னு ஒரு கற்பனை. கூடவே இது எப்படி இருந்து அப்படின்னு படிச்சுப் பார்த்துட்டு சொல்லுங்க.!இது ஒரு புதிய முயற்சி. அதான் கேக்குறேன்!

நேரம் மாலை 5 மணி.. தேதி 10.12.2057 :

23 வயசுல ப்ளாக் எழுதுறேன் அப்படின்னு வந்தேன். இப்ப 70 ஆச்சு. என்ன எழுதினேன் என்ன தெரிஞ்சிக்கிட்டேன்னு தெரியல. ஆனா உலகம் முழுக்க நண்பர்கள் இருக்காங்க அப்படின்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு. அதிலும் நிறைய பேர் அடிக்கடி சந்திச்சுப் பேசுறோம் , ஒரு குடும்ப உறுப்பினர்கள் மாதிரி இருக்குறது அதவிட சந்தோசம்.

நான் ப்ளாக் எழுத வந்த போது இருந்த டெக்னாலஜிக்கும் இப்ப இருக்குற டெக்னாலஜிக்கும் எவ்ளோ வேறுபாடு! நினைச்சுப் பார்க்கவே முடியல. அப்பவெல்லாம் கம்பியூடர் கீ போர்ட்ல இருந்து டைப் பண்ணி எழுதினேன். இப்பவெல்லாம் பேசினா அதுவா எழுதி விதவிதமா ஸ்டைல் மாத்தி என்ன என்னவோ பண்ணுது. இன்னும் நாம நினைக்கிறத கூட எழுதுற மாதிரி இப்ப கண்டுபிடிச்சிருக்காங்க. எப்ப விற்பனைக்கு வருதுன்னு தெரியல.

நான் வந்த புதுசுல மொக்கையா தான் எழுதுவேன். என்ன எழுதுரதுனே தெரியாது. ஆனா அதுக்கு ரொம்ப பீல் பண்ணுவேன். நாமளும் நல்லா எழுதணும் எழுதணும் அப்படின்னு நினைப்பேன். ஆனா எது எழுதினாலும் மொக்கயாதான் இருக்கும். ஆனா இப்ப அந்தப் பிரச்சினை இல்லை , மொக்கையா எழுதுறோமே அப்படின்னு எந்த பீலிங்கும் இல்ல. ஏன்னா அது பழகிப்போச்சு?!?

சத்தியமா ப்ளாக் எழுத வரதுக்கு முன்னாடி வேற எந்த ப்ளாக்க்கும் படிச்சது கிடையாது. எந்த ப்ளாக்கரையும் தெரியாது. அப்புறம் அப்படி இப்படி மொக்க போட்டு நிறைய நண்பர்கள் வந்தாங்க. சரி ப்ளாக் பத்தி மட்டுமே சொல்லி என்ன பண்ணுறது. என் வாழ்க்கைல எவ்ளோ மாற்றங்கள் இந்த 47 வருசத்துல என் வாழ்க்கைல எவ்ளோ மாற்றம்.அப்ப இருந்ததுக்கும் இப்ப இருக்குறதுக்கும் எத்தனை விசயங்கள் கடந்து போயிருக்கு. என்னமோ இப்ப ப்ளாக் எழுத வந்ததுமாதிரி இருக்கு.

என்னால இப்பவும் நம்ப முடியல , நான் ரேடியோ ஜாக்கி ஆனது. அப்போ  இருந்த சந்தோசம் சொல்லுறதுக்கு வார்த்தைகளே இல்ல. என்னோட முதல் ப்ரோக்ராம் பண்ணும்போது இருந்த படபடப்பு , ஒரு வேகம் ஐயோ அத இன்னிக்கு நினைச்சாலும் உடம்பு சிலிர்க்குது. அவ்ளோ ஆசை . நான் நினைச்சது மாதிரியே ஒரு பிரபல ரேடியோ ஜாக்கி ஆகிட்டேன். எத்தன நிகழ்சிகள் அதுல எத்தனை வித்தியாசங்கள் எல்லாமே இன்னும் மனசுல இருக்கு.

இன்னும் அந்த வயசுல மறக்க முடியாத சம்பவம் அப்படின்னு பார்த்தா அவ கிட்ட காதல சொன்னதுதான். அவ்ளோ நாளா பயந்துட்டு இருந்துட்டு அந்த ஒருநாள் மட்டும் எப்படி எனக்கு அவ்ளோ தைரியம் வந்ததுனு இன்னும் வியப்பா இருக்கு. அவள பாக்கும்போதெல்லாம் ஒரு படபடப்பு இருந்துச்சு. ஆனா ஒருநாள் நேரா அவளப் பார்த்து காதலிக்கிறேன் அப்படின்னு சொன்னதும் அவ கண்ணுல முகத்துல காட்டின பாவங்கள என்னால இன்னும் மறக்க முடியல. அதுமட்டும் இல்லாம " பரவால்லையே , இப்பவாவது தைரியம் வந்துசே " அப்படின்னு அவ சொன்னது இன்னும் காதுக்குள்ள கேட்டுட்டே இருக்கு.

அப்புறம் கொஞ்சநாள் கழிச்சு அவளப் பத்தி வீட்டுல சொன்னது , எங்க வீட்டுல அவுங்க வீட்டுல எல்லாம் சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ணினது எல்லாமே இன்னும் மறக்கமுடியாத நினைவுகள இருக்கு. இது மட்டுமா எங்களோட பொண்ணு பிறந்த போது எவ்ளோ சந்தோசமா இருந்துச்சுனு சொல்லவே முடியல. முதல் முதலா ரேடியோ ஜாக்கி ஆனபோது எந்த மாதிரி பீல் பண்ணினேனோ அதவிட கொஞ்சம் அதிகமாவே சந்தோசப்பட்டேன்னுன்னு சொல்லலாம். இன்னும் அந்த நாட்களை நினைச்சா நேரம் போறதே தெரியல.

அப்புறம் என்னோட நீண்டகால லட்சியம் என்னோட நாற்பதாவது வயசுலத்தான் நிறைவேறுச்சு. அதிக அளவுல நிலங்கள் வாங்கி அதுல சொந்தமா இயற்கை முறைல பயிரிட்டு அதுல விளையுற தானியங்கள எங்க மாவட்டத்துலயும் சுத்தி இருக்குற மாவட்ட ஓரங்களிலும் ரொம்ப சுத்தமான கடைகளை கட்டி உற்பத்தி விலையில் இருந்து ஒரு இரண்டு அல்லது மூணு ரூபாய் மட்டுமே லாபம் வச்சு விக்கணும் அப்படிங்கிறது. நான் ரொம்ப கஷ்டப்பட்டு உருவாக்கின ஒரு விசயம் அப்படின்னா அது இதுதான்.

அப்படி விக்கும்போது அப்போ இருந்த உணவு தானியங்கள் இருந்த விலைல பாதி விலைக்குத்தான் என்னோட கடைல இருந்து வித்தோம். அதுவும் இல்லாம எல்லாமே இயற்கை முறைல இருக்குறதால எல்லோருமே இத விரும்ப ஆரம்பிச்சாங்க. ரொம்ப சீக்கிரமே இது பிரபலம் ஆகிடுச்சு.

அதே மாதிரி பாலிதீன் கவர்ல எந்தப் பொருளுமே தரதில்லை அப்படின்னு சொல்லி அதுக்கு மாற்றுப் பொருள் ஒண்ண கண்டுபிடிக்கறத ஊக்குவிச்சு இப்போ பாலிதீன் அப்படிங்கிற கண்ணாடிப் பைகளே இல்லாமே இருக்குறதுக்கு அதுவும் ஒரு காரணம்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு. ப்ரைவேட் லிமிட்டடா ஆரம்பிச்ச கம்பனி இப்போ பப்ளிக் லிமிட்டடா  மாறிருக்கு. அதுமட்டும் இல்லாம மாற்றம் நம்ம கிட்ட இருந்தே வரணும் அப்படிங்கிற என்னோட கொள்கைய நான் இதுல நிரூபிச்சிருக்கேன்.

என்னோட பையன் பெரிய டென்னிஸ் வீரனா வரணும்னு சொன்னது அது மாதிரியே இப்ப ரொம்ப பெரிய ஆளா இருக்குறது இது எல்லாமே உங்களுக்குத் தெரிஞ்சதுதானே , அதான் அடிக்கடி பதிவுபோட்ட்டுடே இருக்கேனே! அப்புறம் அவனோட கல்யாணம் அப்புறம் பேரன் பிறந்தது இப்படி நிறைய சொல்லலாம். பதிவுதான் பெருசா போய்டும்.!

TBTS பேர்ல ஒரு டிரஸ்ட் ஆரம்பிச்சு அதுல நிறைய நல்லது பண்ணனும்னு நினைச்சேன். ஆனா எல்லோருமே பொருளாதார நிலைல சிறப்பா இருக்கறதால விளையாட்டுப் போட்டிகள் , எதாவது கலை நிகழ்சிகள் மட்டுமே நடத்துறோம். ஆனா இது ரொம்ப சந்தோசமானதும் கூட. எந்த மனுசனும் யாரையும் சார்ந்து இல்லாம தன்னிச்சையா நிக்குறது எவ்ளோ பெரிய விசயம்.! சரி நாளைக்கு திங்கள் கிழமை நான் போய் செல்வா கதைகள் எழுதணும். கிளம்புறேன்!!

எத்தனையோ மாற்றங்கள் வந்தாலும் நான் , சௌந்தர் , எஸ்.கே மூணுபேரும் இன்னும் மொக்கை போடுறது நிறுத்தல. அது அப்ப இருந்து அப்படியே போயிட்டே இருக்கு. எவ்ளோதான் பெரிய ஆளா வந்தாலும் நான் இன்னும் அப்படியே இருக்குறது எனக்குப் பிடிச்சிருக்கு. ஏன்னா மொக்கை போல் இனிதாவது எங்கும் காணோம்!!

நீதி : நிகழ்காலத்துக்கு வாங்க!! ஹி ஹி ஹி

ஒரு அறிவிப்பு : அந்த அறிவிப்புக்கு முன்னாடி ஒரு நாலு வரி கவிதை .. ஹி ஹி

தமிழில் உள்ள வார்த்தைகள் அனைத்தும்
சேர்த்து ஒரு கவிதை செய்தேன்
ஏதோ குறைந்தது போல் இருந்தது
உன்பெயரை எழுதியதும் நிறைவானது!!

தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் அந்த நான்கு
எழுத்துக்கள் மீது பொறாமை கொண்டன
உன்பெயரை அலங்கரிப்பதால்!!
அந்த நான்கு எழுத்துக்கள் ர்ந்தசௌ!

கொஞ்சம் ஓவரா இருக்குல .. ஹி ஹி .. அதுவும் அவன பத்தி சொல்லுறதுக்கு இந்தக் கவிதை எல்லாம் ஓவர்தான்.. சரி விடுங்க .. அவனுக்கு நாளைக்குப் பிறந்தநாள். அதனால அவன ரொம்ப சந்தோசமாகவும் , மகிழ்ச்சியாவும் அவன வாழ்க்கை அமையனும் அப்படின்னு இறைவனை வேண்டி அமர்கிறேன்!!

பின்குறிப்பு : இந்தப் பதிவ தொடர் பதிவா எழுதலாம் அப்படின்னு ஒரு ஆசை. அதனால நான் வெறும்பய அண்ணனையும் சுற்றுலாவிரும்பி அருணையும் அழைக்கிறேன்!

Monday, February 7, 2011

செல்வா கதைகள்

முன்குறிப்பு : பூமி சூரியனை சுற்றி வருது அப்படின்னு சொன்னா கலீலியோவ கல்லால அடிச்சுக் கொன்றது அன்றைய உலகம்.பின்னர்தான் உண்மையை உணர்ந்து கொண்டது.

                                        அருண் + அருண் + செல்வா

  சென்ற சனிக்கிழமை தினத்தன்று மொரீசியசில் இருந்து இந்தியா வந்திருக்கும் செல்வாவின் நண்பர் அருண் அவர்ளை சந்திக்கலாம் என்று சுற்றுலா விரும்பி அருண் , கார்த்திக்குமார் மற்றும் செல்வா ஆகியோர் முடிவு செய்தனர். சில பல காரணங்களால் கார்த்திக் வர இயலாமல் போனது. சரி என்று அருண் மற்றும் சுற்றுலா விரும்பி அருண் ஆகியோர் செல்வாவை கோவை வருமாறு அழைத்தனர்.

  செல்வாவும் காலை 10 மணிக்கு வருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால் செல்வா கோவை சென்ற நேரம் 11.௦30. பின்னர் அவர்களிடையே நடந்து உரையாடல்கள்.

அருண் ( சீனியர் ) : ஏன் டா இவ்ளோ நேரம் ? 

செல்வா : தலை சீவ மறந்திட்டேன் , அதான் பாதிவரைக்கும் வந்திட்டு மறுபடியும் வீட்டுக்குப் போய் தலை சீவிட்டு வந்தேன்.

அருண் (ஜூனியர் ): உனக்கென்ன பொண்ணா பாக்குறோம் , இதெல்லாம் ரொம்ப அதிகம்டா. என்று கூறிவிட்டு மூவரும் ஒரு ஐஸ் கிரீம் கடைக்குள் சென்று ஐஸ் கிரீம் சாப்பிட்டனர்.அப்பொழுது அருண் ( சீனியர் ) அவர்கள் "வரும்போது ஏன் கால நொடிச்சு நொடிச்சு நடந்து வந்த "? 

செல்வா : காலுல முள் ஏறிடுச்சு, அதான் அண்ணா! "

அருண் : இதுதான் உங்களோட கேட்ட பழக்கம் , இதுவே ஒரு வெள்ளைகாரனுக்கு முள் ஏறினா காலுல முள்ள எத்திக்கிட்டேன் அப்படின்னு சொல்லுவான் , ஆனா நம்ம ஆளுக மட்டும் முள்வந்து இவுங்க மேல ஏறிடுச்சு அப்படின்னு சொல்லுவாங்க.

செல்வா : அவுங்க முள் ஏத்திக்கிட்டேன் அப்படின்னு தமிழ்ல சொல்லுவாங்களா ?

அருண் (ஜூனியர் ): நீ இப்பத்தான் இப்படியா ? இல்ல எப்பவுமே இப்படியா ? .. என்று கூறிவிட்டு மூவரும் சாப்பிட அஞ்சப்பர் உணவகம் செல்லலாம் என்று முடிவு செய்து அருண் ( ஜூனியர் ) அவர்களது வண்டியில் முதலில் செல்வாவை அழைத்துக்கொண்டு அஞ்சப்பர் உணவகம் இருந்த இடத்திற்கு அருகில் கொண்டு சென்று விட்டுவிட்டு," இப்படியே நேரா போனீனா அஞ்சப்பர் வரும் , அங்க இரு , நான் போய் அண்ணன கூட்டிட்டு வந்திடறேன் " என்றவாறு கிளம்பினார். சிறிது நேரம் கழித்து வந்த இருவரும் செல்வாவை அஞ்சப்பர் உணவகத்தில் இல்லாததைக் கண்டு அவருக்கு அழைத்தனர். 

அருண் : செல்வா , எங்க இருக்க ? 

செல்வா : அங்கேதான் இருக்கேன் .

அருண் : அதான் எங்க ?

செல்வா : நீங்க இறக்கிவிட்ட இடத்துல .

அருண் : அங்க ஏன் நிக்குற , நான்தான் அஞ்சப்பருக்கு வர சொன்னேன்ல ..

செல்வா : நீங்கதானே , அஞ்சப்பர் வரும்னு சொன்னீங்க , அதான் நாம ஏன் வீணா நடக்கனும்னு இங்கே நின்னுட்டேன் , அஞ்சப்பர இன்னும் காணோம் ?!!!

அருண் : ஐயா சாமி , அப்படி சொன்னது தப்புத்தான் , அப்படியே நேரா வா .. ( இவனெல்லாம் வச்சிட்டு எப்படித்தான் )

பின்னர் மூவரும் அஞ்சப்பர் உணவகத்தில் உணவு வகைகளை ஆர்டர் செய்துகொண்டிருந்தனர். அப்பொழுது செல்வாவிடம் என்ன வேண்டும் என்று கேட்ட உணவாக ஊழியர் செல்வா சொன்ன பதிலைக்கேட்டு சற்றே அதிர்ச்சியுற்றார். செல்வா தனக்கு நேராக இருந்த மீன்தொட்டியில் வளர்க்கப்பட்ட மீன் ஒன்றை வேண்டும் என்று கேட்டதுதான் இந்த அதிர்சிக்குக் காரணம்.

அருண் : மானத்த வாங்காத , அது அழகுக்காக வளர்க்குறது..

செல்வா : சரி வேற எதாச்சும் கொடுங்க .. அதே தொட்டியில் இருந்த வேறு கலர் மீனைக் காட்டினார்.

அருண் : ஐயோ , அந்த தொட்டில இருக்குறது எல்லாமே அழகுக்காக வளர்க்குரதுதான்.

செல்வா : அது யாரு அழகு , இந்த ஓட்டல் முதலாளியா ? 

அருண் : இனிமேல் எதாச்சும் பேசினா கண்டிப்பா நான் இப்படியே கிளம்பிப் போய்டுவேன்.. உன்னப் பார்ப்பேன் அப்படின் நினைச்சிருந்தா கண்டிப்பா நான் மொரீசியசுலையே இருந்திருப்பேன். உன்னயெல்லாம் வச்சு எப்படித்தான் சமாளிக்கிறாங்க ?

செல்வாவிற்கு புகழ் அதிகமாக பிடிக்காது என்பதால் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.

நீதி : முன்குறிப்புக்கும் செல்வா கதைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

பின்குறிப்பு : வார வாரம் இரண்டு கதை எழுதுவேன் , ஆனா நேரப் பற்றாக்குறை காரணாமாக ஒரே கதை மட்டுமே இந்தவாரம். அதுவும் இல்லாம இதுல இருக்குற எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும்.





Saturday, February 5, 2011

மொபைல் அப்ளிகேசன்ஸ்

முன்குறிப்பு: கண்டிப்பா எல்லோரும் மொபைல் வச்சிருப்பீங்க. அதுல சிலது மல்டிமீடிய மொபைலா இருக்கும் , சிலது சாதாரண போனா இருக்கும். இந்தப் பதிவு மல்டிமீடியா மொபைல் அப்ப்ளிகேசன்ஸ் பத்தினதுதான். ஏற்கெனவே இங்க இத பத்தி எழுதிருக்கேன். அதுல நிறைய அப்ப்ளிகேசன்ஸ் பத்தி சொல்லிருந்தேன். இன்னும் சிலத இங்க பார்க்கலாம்.

ஆல் இன் ஒன் அப்ளிக்கேசன் :
biNu அப்படிங்கிற அப்ப்ளிகேசன் ஒண்ணு இருக்குது. சொல்லப்போனா இதுல இல்லாத வசதிகளே கிடையாது. அத விட இதுபத்தி சொல்லனும்னுதான்  இந்தப் பதிவே. அப்படி என்ன அதுல இருக்குதுன்னு பார்த்தா , முதல்ல கிரிகெட் ஸ்கொர்ஸ் தெரிஞ்சிக்கலாம். அதாவது இப்ப லைவ்ல எந்த டீம் விளையாடிட்டு இருக்காங்க ,எந்த மேட்ச் அப்படிங்கிற  எல்லா தகவல்களும் வந்திடும்.

  அடுத்த விசயம் செய்திகள். அதுவும் தமிழ்ல செய்திகள் படிசிக்கிலாம்.இதுல தினகரன் பேப்பரோட செய்திகள் அப்படியே வரும் . கூடவே BBC தமிழ் செய்திகளும் படிச்சிக்க  முடியும். அதே மாதிரி ஆங்கிலத்திலையும் செய்திகள் படிசிக்கிலாம். அதவிட படிப்பதற்கும் ரொம்ப எளிமையா இருக்குறது இதோட சிறப்பு.

  அடுத்து Dictionary. இதுவும் biNu ல இருக்கு. பொதுவா நிறைய dictionary கிடைக்குது. ஆனா இதுல ஒரே அப்ப்ளிகேசன்ல இருக்குறது சிறப்பு. இதுல விக்கிபீடியாவும் இருக்கு. அதனால அதையும் பயன்படுத்திக்கலாம்.

   அடுத்து weather . இதுவும் ஒரு பயனுள்ள விசயம்தான். அடுத்து கூகுள் சர்ச்ம் இருக்கு. கூடவே Astrology , Forex இதெல்லாம் இருக்கிறதால நான் என்ன சொல்லவரேன் அப்படின்னா நீங்க போன் வச்சிருந்தா கண்டிப்பா இந்த அப்ப்ளிகேசன முதல்ல டவுன்லோட் பண்ணுங்க. பண்ணி பயன்படுத்திப் பார்த்துட்டு சொல்லுங்க. அதோட இணைப்பு கீழ கொடுத்திருக்கேன். அங்க போய் உங்க மொபைல் நம்பர் கொடுத்த உங்க மொபைலுக்கு டவுன்லோட் லிங்க் தருவாங்க. அதுல இருந்து நீங்க டவுன்லோட் பண்ணிக்கலாம்.  

அந்த முகவரி : http://www.binu.com 

அடுத்து skype :

  இது எல்லோருக்குமே தெரிஞ்சிருக்கும். கம்பியூட்டர்ல பயன்படுத்திருப்பீங்க. ஆனா மொபைல்ல கூட பயன்படுத்த முடியும். அதுக்கு நீங்க www.sharejar.com போய் டவுன்லோட் பண்ணிகோங்க. கண்டிப்பா பயன்படும்னு நினைக்கிறேன். என்னோட மொபைல்ல பேசிருக்கேன். ஆனா எல்லோருக்கும் சரியா வருமா அப்படின்னு தெரியல.

நீதி : இதுக்கெல்லாம் என்ன நீதி சொல்லுறது.

பின்குறிப்பு : மொக்கையின் வளர்ச்சி நிலை விரைவில். 

Wednesday, February 2, 2011

ஆன்மா! ( தேவா ஸ்டைல் )

முன்குறிப்பு : இந்தப் பதிவுல சொல்லப்பட்டிருக்கிற விசயங்கள் எல்லாமே ஆன்மா , கடவுள் என்னோட புரிதல்கள் மட்டுமே. அது உங்களோட புரிதல்கள் கருத்துக்களுடன் மாறலாம்.

ஆன்மா , ஆன்மீகம், கடவுள் இதுபற்றி சிந்திக்கும்போது எப்பொழுதுமே குழப்பம் தான் மிஞ்சுது.ஆன்மாவை உணரனும் அதாவது நமது மனம் உடல் சார்ந்த விசயங்களைத் தாண்டி வாழ்வின் ஆதாரம் என்று சொல்லப்படுகின்ற , நம்பப்படுகின்ற ஒரு விசயத்தினை உணரனும்னு சிலசமயங்களில் நினைச்சாலும் பல சமயங்களில் வேண்டாம் அப்படின்னே தோணுது.

 ஆன்மா என்ற ஒன்றுக்கு உங்களோட மனம் பற்றியோ , உடல் பற்றியோ தெரியாது இங்கே மனம் பற்றி ஆன்மாவுக்குத் தெரியாது, அதாவது கவலை இல்லை  அப்படிங்கிற கூற்று உங்களுக்கு குழப்பத்தைத் தரலாம். மனம் அப்படிங்கிற விசயம் எப்பொழுதுமே இந்த வாழ்க்கை நிலையானது , இங்கே சாதிக்கணும் , நிறைய சொத்துக்கள் சேர்த்துக்கனும்னு  நினைக்கக்கூடியது. ஆனா ஆன்மாங்கிறது இந்த வாழ்க்கை போலியானது , அதாவது இப்ப இந்த உடலுள குடிகொண்டுள்ளோம் , காலம் மாறும்போது ஒரு எறும்போட உடலிலும் குடிகொள்ள வேண்டி இருக்கலாம்னு நினைக்கக்கூடியது.

   இதிலிருந்து ஆன்மாவை உணர்வதின் பயன்கள் , நான் ஏன் அத உணரவேண்டாம்னு சொல்லுறேன்னு பார்க்கலாம். ஆன்மாங்கிற விசயத்தைப் பல பேர் பலவிதமா சொல்லுறாங்க. பொதுவா உயிர்தான் ஆன்மா அப்படிங்கிற எண்ணமும் இருக்கு. ஆன்மாவை உணர்வது அப்படிங்கிறது இப்ப நம்ம இருக்குற இந்த உடல் நிலையற்றது. அதனால் வரும் இன்பதுன்பங்களும் நிலையற்றது. நாளைக்கு ஒரு கார் வந்து மோதினாலோ , இல்ல ஒரு நோய் வந்தாலோ இந்த வீட்டிலிருந்து போய்டுவோம். இந்த வாழ்க்கை , பணம் , புகழ் எல்லாமே போலியான ஒண்ணு அப்படின்னு நினைக்கும் போது பெரும்பாலும் ஆன்மா அப்படிங்கிற விசயத்தைப் புரிஞ்சிக்கிறோம்னு நினைக்கிறேன்.

  சரி ஆன்மாவை உணர்வதன் பயன்கள் என்ன ? ஆன்மாவ உணர்ந்தவர் நிச்சயமா எதுக்கும் ஆசைப்படாதவராகத்தான் இருப்பார் அப்படின்னு நினைக்கிறேன். அதே சமயம் எதுக்கும் கோபமோ , இல்ல சந்தோசமோ படமாட்டார். அதாவது பற்று இன்றி இருப்பார். அப்படின்னா சாமியாரா அப்படின்னு கேக்காதீங்க. சாமியார் அப்படிங்கிற நிலை கூட ஆன்மாவை உணர்ந்த நிலைன்னு சொல்லிட முடியாது.

  அதாவது யார் ஒருவர் எந்தவித ஆசையும் இல்லாம , கோபமும் இல்லாம , அதே சமயம் அவரோட வேலைகளை சரியாக செய்துட்டே இருப்பார். அதாவது அவரது வேலைகளில் இருந்து பின்வாங்க மாட்டார். அதே சமயம் எதையும் எதிர்பார்க்கவும் மாட்டார். இப்ப அவர்கிட்ட இருந்து நீங்க ஒரு பத்தாயிரம் ஏமாத்தினா கூட கண்டுக்காம விட்டுடுவார்னு சொல்லுறேன். ஆனா அப்படி இருக்குறவங்கள லூசு அப்படின்னு சொல்லுறோம் , நாம லூசு அப்படின்னு சொன்னா கூட அவருக்கு கோபம் வராது.

  அதே மாதிரி ஆன்மாவை உணர்ந்தவங்க கண்டிப்பா சந்தோசமோ , இல்ல துக்கமோ படமாட்டங்க.சந்தோசத்துக்கும் துக்கத்துக்கும் அப்பாற்பட்டவர்தானே ஆன்மாவை உணர்ந்தவரா இருக்க முடியும். அதாவது பாசத்துக்கும் கட்டுப்பட்டவரா இருக்க மாட்டாங்க. ஏன்னா அம்மா , அப்பா போன்ற உறவுகள் இந்த உடலுக்கு மட்டும்தானே , ஆன்மாவுக்கு கிடையாதுல. அப்படின்னா யோசிச்சு பாருங்க , எந்த வித உணர்வுமே இல்லாம , சந்தோசத்துல சிரிக்காம , துக்கத்துல அழாம ஒரு கல்லு மாதிரி அதாவது ஒரு ஒருவரால வாழ முடியுமா ?

  எந்த வித உணர்வுமே இல்லாம வாழ்வதற்கா இவ்ளோ போராட்டம் ? அப்படின்னா ஆன்மாவை உணர்வது நன்மை இல்லையா அப்படின்னு நீங்க நினைக்கலாம். உண்மைலேயே நன்மை தீமை , நல்லவன் , கெட்டவன் இப்படி எல்லா விசயங்களையும் தாண்டின ஒண்ணுதான் ஆன்மாவை உணர்வது. அப்படின்னா வாழ்கைய வெறுக்கறதா அப்படின்னு கேக்கலாம். கண்டிப்பா வெறுப்பது கிடையாது. வெறுப்பு வேற உணர்வது வேறு. உங்களுக்கு ஒரு விசயம் பிடிக்கலைனா அது வெறுப்பது. ஆனா ஒரு விசயத்த உங்களுக்கு பிடிக்கவும் இல்ல , அதே சமயம் வெறுப்பும் வரல அப்படிங்கிறது நடுநிலைமை. ஆனா இந்த இரண்டுமே இல்லாம ஒரு விசயத்த விரும்பாம அதே சமயம் வெறுக்காமையும் செய்யுறதுன்னு சொல்லலாம்.

  உண்மைலேயே இந்த நிலைல நிச்சயமா வெளியில இருந்து பார்க்கும்போது எந்தவித சந்தோசமும் இல்லாம தெரியலாம். ஆனா சந்தோசம் , துன்பம் அப்படிங்கிற நிலையை தாண்டின பிறகு எதுக்கு சந்தோசப்படனும். ஆனா இந்த நிலையில் நம்மால வாழ்கைய ரசிக்க முடியாது. அதாவது சிரிக்க வேண்டிய நிலைல சிரிக்காம, அழவேண்டிய நிலைல அழாம எதுக்கு வாழனும் ? ஆனா இது எல்லாமே போலியான ஒண்ணுதான். இருந்தாலும் கூட வாழுரதுக்குனு வந்த பிறகு ஏன் அத விட்டுட்டு வேற நிலைக்குப் போகணும்னுதான் எனக்கு குழப்பமா இருக்கு.

  அப்படின்னா மேல சொன்னது மாதிரி ஆன்மாவை உணர்வது நிச்சயமா ஒரு தவறான ஒரு பாதையைத்தான் காட்டும். அதாவது இந்த உலகம் கண்டிப்பா நிலையானது இல்ல , அப்புறம் எதுக்கு இவ்ளோ முயற்சி செய்யனும் , சிரமப்பட்டு முன்னேறனும் அப்படிங்கிற மாதிரி எதிர் விளைவுகளையும் கொடுக்கும் தானே?

  ஆன்மாவை உணர்வது அப்படிங்கிற விசயத்தை விட நாம பொதுவாவே நமக்கு பிடிச்ச மாதிரி அடுத்தவங்கள எதுக்காகவும் காயப்படுத்தாம , எப்போதுமே சந்தோசமா அதாவது முடிஞ்ச அளவு சந்தோசமா இருந்தாலே வாழ்க்கை நமக்கு பெரிய வரமா அமையும். அதே மாதிரி தியானம் பற்றி பேசிட்டிருக்கும்போது மனிதன் தியானம் பண்ணுறது கூட கடவுளை அடையும் வழி அப்படின்னு சொன்னாங்க. ஆனா உண்மைலேயே கடவுளை அடையணும்னா வாழ்க்கை மீது ஒரு பிடிப்பு இல்லாம அதாவது இத விரும்பாம இருந்தாதானே அது நடக்கும்.

  தியானம் பண்ணுறது மனதினை அடக்கனும்னு சொல்லுறாங்க , ஆனா மனதினை அடக்கி ஒரு அமைதி வரதுக்கும் மனதினை அதான் போக்கிலேயே விட்டு ஒரு அமைதி வரதுக்கும் வித்தியாசம் இருக்குதுன்னு நினைக்கிறேன், கண்டிப்பா மனதினை அடக்குவதைக் காட்டிலும் அதை அதான் போக்கிலேயே அதாவது அது எவ்ளோ சிந்திக்குது அப்படின்னு விட்டாதானே நம்மால தாண்டிப் போக முடியும் . அது இல்லாம மனச அடக்குறோம் அப்படின்னு சொல்லிட்டு ஒரு வழிய தியானம் பண்ணி அடக்கினாலும் கூட அது இந்த வாழ்கை நிலையானது அப்படிங்கிற ஒரு போலியான விசயத்த உண்மைன்னு நம்புறது மாதிரி தானே.!

  மொத்தத்துல கடவுள நம்புறவங்க நம்புங்க , நம்பாதவங்க நம்ப வேண்டாம். ஆனா கண்டிப்பா ஆன்மாவையோ கடவுளையோ உங்களை தவிர உங்களுக்கு வேற யாராலையும் காட்டிவிட முடியாது. பொதுவா வாழ்வதற்குத் தான் வந்திருக்கோம். சந்தோசமா வாழ்வோம் . அடுத்தவங்களப் பத்தி சிந்திக்கரத விட்டாவே ரொம்ப சந்தோசமா வாழ முடியும். அதே மாதிரி சந்தோசமா வாழனும்னா நீங்க படிச்ச படிப்பு , புகழ் , எல்லாத்தையும் எப்பவுமே எல்லோர்கிட்டவும் காட்டாதீங்க. இதெல்லாம் தூக்கி வீசிடுங்க , எப்ப தேவைப்படுதோ அப்ப மட்டும் காட்டுங்க , அப்பத்தான் மகிழ்ச்சியா இருக்கமுடியும் அப்படிங்கிறது என்னோட கருத்து. மத்த படி ஆன்மா அதான் போக்கிலேயே இருக்கட்டுமே!!

நீதி : மொக்கை போல் இனிதாவது எங்கும் காணோம்!

பின்குறிப்பு : நிறைய சொல்லனும்னு தோணுது , ஆனா வார்த்தைதான் இல்லை. இங்க சொன்னது எல்லாமே என்னோட புரிதல்கள் மட்டுமே அதுல தவறுகள் இருந்தா பின்னூட்டத்துல சொல்லுங்க.